Saturday, 8 October 2011

போராட்டம்,


போராட்டம்,


வாழ்வதற்காக...

உணவிற்காக...

அன்பிற்காக...

உறவை தக்கவைப்பதற்காக...

பணத்திற்காக...

அமைதிக்காக...

இனத்தை காப்பதற்காக...

இடத்திற்காக...

நிலத்திற்காக...

மொழிக்காக...

கலச்சாரத்திற்காக...

பெயருக்காக...

அந்தஸ்துக்காக...

போராட்டத்தை ஒழிப்பதற்காக...


போராட்டம்.


போராட தெரியாதவன் ஏழை, போராட தெரிந்தவன் பணக்காரன், போராட சொல்லிக்

கொடுப்பவன் பேரறிஞன், போராடுபவன் போராளி.

எனில் மனிதன் எங்கே...?

போராடப்பிறந்தவன் தான் மனிதனா?

அப்படியானால், உண்மையில் இந்த வாழ்க்கையின் பயன் மற்றும் பிறந்ததற்கான

நோக்கம் என்ன?

வாழ்க்கையின் பயனையும், நாம் பிறந்த நோக்கத்தையும் அறியாமலேயே

வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்,

மனிதன் என்ற போர்வையில் மிருகமாக...



Thursday, 6 October 2011

சோமாலியா மக்களின் நிலை

நல்ல சுழ்நிலையில் வாழ்ந்துக் கொண்டும்,
ரசிகர் மன்றம் வைத்துக் கொண்டும்,
திரையரங்கில் பஞ்சு இருக்கையில் அமர்ந்து கொண்டும்,
நொறுக்கு தீணியை சுவைத்துக் கொண்டும்,
பொழுதுப் போக்குக்காக திரைப்படங்களை ரசித்து பார்த்துக் கொண்டுருக்கின்ற,
நம் நாகரிக மக்களுக்கு இப்படத்தை சமர்ப்பிக்கிறேன்...


Wednesday, 5 October 2011

உளி (புது வடிவம்)

நாங்கள் பதினொறு நபர்கள் கொண்ட குழு.


பெண்கள் மூவர்

ஆண்கள் எட்டு

சமூகத்தின் அநீதி கண்டு 

கொதித்தெழும் கூட்டத்தாரே 

நாங்களும் !!!


புறப்படுகிறோம் 

உளி கொண்டு ! 

சமூக இழிவுகளை கடைந்தெடுக்க...


செதுக்கிடுவோம் !

புதியதோர் சமூகத்தை...